
பிரதமர் வேட்பாளருக்கு மிகத் தகுதியானவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் என்பதை நிரூபிக்கும் தருணம் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் காடீர் யாசின் தெரிவித்தார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நிலைமை தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
அந்த வகையில் பிரதமர் பதவிக்கு அன்வார் இப்ராஹிம் மிக பொருத்தமானவர் மற்றும் தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் தருணம் வந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டுள்ளது. மேலும் 11 எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆகவே நாட்டை வழி நடத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மட்டுமே தகுதியானவர் என்பதை பக்கத்தான் ஹரப்பான் கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
