
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் என்ற மகாபாரதத்தின் வாசகதிற்கிணங்க தேசிய கூட்டணியின் நிலை தற்போது அமைந்து விட்டது என ஜசெக சந்திர சேகரன் ஆறுமுகம் தனது அறிக்கையில் வயிலாக தெரிவித்துள்ளார்.
நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி பின் வாசல் வழியாக ஆட்சி அமைத்த தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தை அமைத்த அதன் தலைவர்களின் நிலை அந்த மகாபாரத்தின் வரிகள் இங்கே நமக்கு பாடம் உணர்த்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
60 ஆண்டு கால தேசிய முன்னணி அரசாங்கம் வேண்டாம் என தீர்மாணித்து நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை தேர்வு செய்த மக்களை தன் சுயநலத்திற்காக தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய அரசாங்கத்தை அமைத்த டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆட்சி அமைத்து சரியாக பதினேழு மாதங்கள் கூட நிறைவடையாத அவர்களின் இன்றை ஆட்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது என்பது அதற்கு சான்று என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நம்பிக்கை மோசடி செய்து ஆட்சி அமைத்தின் விளைவே இந்த நெருக்கடி, அதற்ககு கிடைத்த பரிசே இன்று அவர்கள் அனுபவவிக்கும் இன்றை
நிலை என ஜொகூர் ஜசெகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திரு சந்திர சேகரன் கருத்துரைத்துள்ளார்.



