
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படும் தகவலை தஞ்சோங் காராங் நாடாளமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நோர் ஓமார் மற்றும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஜிஸ் ஆகியோர் மறுத்துள்ளனர்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு தேசிய முன்னணியைச் சேர்ந்த 31 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார்.
இதில் எங்களின் பெயரும் இடம் பெற்றுள்ளன.
நாங்கள் இருவரும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.



