
பல லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டிருக்கும் சிப்பாங் புதிய மின் சுடலை வரும் திங்கட்கிழமை முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக நகராண்மைக் கழக உறுப்பினர் சிவகுமார் தெரிவித்தார்.
வரும் திங்கட்கிழமை முதல் இந்த மின் சுடலையில் ஆறு சடலங்களை தகனம் செய்யப்படும்..
செர்டாங் மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ள சடலங்கள் இந்த மின் சுடலையில் தகனம் செய்யப்படும்.
இரண்டு அடுப்புகள் கொண்டிருக்கும் இந்த மின் சுடலையில் முதல் கட்டமாக ஆறு சடலங்களை தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் நேரம் இருந்தால் கூடுதல் சடலங்களை எரிக்க முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.



