
வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் நாட்டில் கட்டங்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அதற்கு முன்னதாகவே 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று சீரார் மருத்துவ நிபுணர் டாக்டர் மூசா முகமட் நோர்டின் இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
மாணவர்கள் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கும் வகையில் அவர்களுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடப்பட வேண்டும்.
குறிப்பாக பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசிகளை மாணவர்களுக்கு செலுத்தலாம் என்றார் அவர்..
மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை ஒத்திவைப்பது முறையல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.



