
இன்று உலகம் அன்னையர் தினத்தை எளிமையாக கொண்டாடுகிறது. நம்மை பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்து சீராட்டி பாலூட்டி வளர்த்த அன்னையர்களுக்கு நாம் எப்போதும் தலை வணங்க வேண்டும் என்று சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மண்ணில் பிறந்ததும் நாம் காணும் முதல் கடவுள் அம்மாதான்.
நம்மை வளர்த்து சீராட்டி பாராட்டிய அன்னையர்களை ஒருநாளும் மறக்கக்கூடாது. இன்று உலக அன்னையர்களை போற்றி வணங்குகிறது என்றார் அவர். நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒருநாளும் அன்னையர்களை மறக்கக்கூடாது. அவர்கள் எப்போதும் நாம் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
