
3 கொடி வெள்ளி வெகுமதியை பெற்றுக்கொண்டு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க மூன்று கெஅடிலான் எம்பிக்கள் முன் வந்திருப்பதாக கூறப்படும் தகவலை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் மறுத்துள்ளார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சிவராசா மற்றும் டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா ஆகியோருடன் நானும் அணிதாவ போகிறோம் என்று கூறப்படும் தகவல்களை மரியா சின் மறுத்துள்ளார்.
கெஅடிலான் கட்சிக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் நாங்கள் மூவரும் விசுவாசமாக இருப்போம் என்று அவர் தெரிவித்தார்.



