
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நாட்டில் கட்டங்கட்டமாக பள்ளிகள் திறக்கப்படுவதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பவில்லை.
நாட்டில் 3 லட்சத்து 98,687 பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 94.6 விழுக்காட்டினர் பள்ளிகள் திறக்கப்படுவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று அறிவித்துள்ளனர்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில் தங்களின் பிள்ளைகளின் உயிரை பணயம் வைக்க பெற்றோர்கள் தயாராக இல்லை.
ஆகவே செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை பெற்றோர்கள் விரும்பவில்லை.
