
நம்பிக்கை துரோகத்தால் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் தண்டிக்கப் பட்டிருப்பதாக அமானா தலைவர் முகமட் சாபு தெரிவித்தார்.
கடந்த 2018 நடைபெற்ற தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்தவர்களில் இவரும் ஒருவராவார்.
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது நாட்டில் ஒரு கருப்பு தினமாகும்.
2020 பிப்ரவரி மாதத்தில் இந்த கருப்பு தினம் அரங்கேற்றப்பட்டது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு அணி தாவி புதிய கூட்டணி என்ற பெயரில் ஆட்சியை அமைத்தனர்.
நம்பிக்கைத் துரோகத்தால் உருவான கூட்டணி இன்று அதே நம்பிக்கை துரோகத்தால் கவிழ்த்துள்ளது என்று அவர் சொன்னார்.
