
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையில் இன்று காலையில் புத்ராஜெயாவில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த அமைச்சரை கூட்டத்தில் பங்கேற்க போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி, அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ இட்ரிஸ் ஹருண், அரசாங்க தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி மற்றும் மலேசிய ராணுவ தளபதி ஜெனரல் அப்பெண்டி ஆகியோரும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக இந்த சிறப்பு அமைச்சரைக் கூட்டத்தை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
