
யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி தெரிவித்தார்.
நாடாளுமன்ற எம்பிக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
நாட்டின் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருப்பதால் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
