
கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில்,அதில் பயணித்த மூவர் கருகி மாண்டனர்.
இந்த பரிதாப சம்பவம் இன்று அதிகாலை 2.50 மணியளவில் ஜெலுத்தோங்,ஜாலான் மஸ்ஜிட் நெகிரி அருகே நிகழ்ந்தது.
விபத்துக்குள்ளான அந்த காரில் சிக்கி கருகிய நிலையில் கிடந்த இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடலை மீட்டதாக ஜாலான் பேரா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் தலைவர் ஸாரி மன்சோர் கூறினார். இறந்தவர்களின் அடையாளங்கள் உடனடியாக தெரியவில்லை. உடல்கூறு சோதனைக்காக சடலங்கள் பினாங்கு
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.


