
பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ளது.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை 15 அம்னோ எம்பிக்கள் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழ்ந்தது.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை இன்று மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை மாமன்னருக்கு அனுப்பி வைத்திருப்பதாக அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
