
பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கடிதத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்தித்தபோது டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தமது பதவி விலகல் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படும் வரை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இடைக்கால பராமரிப்பு பிரதமராக தொடர்ந்து பணியாற்றும்படி மாமன்னர் கேட்டுக்கொண்டதாக இஸ்தான நெகாரா அதிகாரி டத்தோ இண்ட்ரா அமாட் பாடில் சம்சூடின் தெரிவித்தார்.
