
இனிமேல் நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென பதவி
விலகியுள்ள அமைச்சர்கள் பலர் புலம்பிக் கொண்டு
வருகின்றனர்.
பெரிகாத்தான் அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய போது, தமக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பும் வழங்கிய
அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்ட கைரி ஜமாலுடின்,இனி
நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.பிரதமரின் பதவி
திறப்பை மாட்சிமை தங்கிய பேரரசர் ஏற்றுக் கொண்டு விட்டதால்,இன்று
2021 ஆகஸ்ட் 16 -ஆம் நாள் முதல் நாட்டை இறைவன்தான் காப்பாற்ற
வேண்டும் என வீடமைப்பு ஊராட்சித்துறை முன்னாள் அமைச்சர் ஸுரைடா
கமாருடினின் அரசியல் செயலாளர் நோர் ஹிஸ்வான் அகமட் தமது
முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
