
அங்கு வியாபாரம் செய்யும் சிறு தொழில் வியாபாரிகளில் பெரும்பாலானோர் B40 பிரிவைச் சேர்ந்தவர்களாவர். ஆனால், தற்சமயம் Covid-19 அதிகரிப்பால் அவர்கள் அனைவரும் தங்களது அன்றாட வியாபாரத்திலும் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் இதுவரை அவர்களுக்கு என்ன உதவிகள் வழங்கினார் என்று பாகோ தொகுதி மக்கள் நீதிக் கட்சியின் தலைவரும் N.08 புக்கிட் பாசிர் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளருமான திரு.சுப்ரமணி கேள்வி எழுப்பினார். மேலும், அரசாங்கம் சிறு தொழில் செய்யும் வியாபாரிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் ஏதேனும் உதவிகளைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் தலைவர் கேட்டுக் கொண்டார்.
