
நான் அணிதாவும் அரசியல்வாதியல்ல. மேலும் அணி தாவும் அரசியலும் எனக்கு தெரியாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் தெரிவித்தார். பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் அமைச்சராக பதவி வகித்த சேவியர் ஜெயகுமார் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரித்த ‘தவளை அரசியலை’ எனக்கு நடத்த தெரியாது. நான் எப்போதும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன்.வாக்களித்த மக்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன்.
அடுத்த பொதுத் தேர்தலிலும் மக்கள் ஆதரவோடு பக்காத்தான் கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் சொன்னார்.



