
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் குழந்தை பராமரிப்பு இலவச பயிற்சியில் பங்கேற்கும்படி பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு இம்மாதம் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை இயங்கலை வாயிலாக நடைபெறும் சிறார் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என்று சிலாங்கூர் யாவாஸ் அறவாரியம் தெரிவித்தது.. https: yawas.my/permohonan/ என்ற அகப்பக்கம் வாயிலாக இந்த பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
