
தோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது..
வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் வென்று அசத்தி உள்ளார். அரையிறுதியில் தோல்வி அடைந்த ஹர்விந்தர் சிங், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், தென்கொரிய வீரர் கிம் மின் சூவை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்
