
கோவிட் நோய் தொற்றினால் மலேசியா உட்பட உலகமெங்கும் நோயீத் தொற்றால்
லட்சக்கணக்கான மக்கள் உயிரழந்தும், வேலை, பொருளாதாரம், வாழ்வாதாரம்
ஆகியவற்றையும் இழந்துள்ளனர். இத்தகையச் சூழ்நிலையை முன்னிட ;டு நாடு
தழுவியளவில் அரசாங்கமும் பல நல்ல உள்ளங்களும் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகளை
வழங்கி வருகின்றன. அந்த வகையில் பாங்கி மலேசிய தேசிய பல்கலைக்கத்தைச்
சார்ந்த மாணவர்களின் தன்னார்வு இளைஞர் இயக்கம் டேசா செர்டாங மழலையர் பள்ளி பெற்றோர்களுக்கு
உணவுக் கூடைகளை வழங்கியது. இயக்கத்தின்
தலைவர் தருசன் முன்னனியில பெற்றோர்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை
முன்னெடுத்துள்ள விஜயனுக்கும் அவர்தம் இளைஞர்களுக்கும் டேசா செர்டாங
மழலையர் பள்ளி பொறுப்பாளர் கா.நா. கோபால் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொண்டார்.
காஜாங் நகராண்மைக்கழக உறுப்பினர் இரா. தியாகராசன்,
பலாக்கோங ; தொகுதி நகராண்மைக்கழக உறுப்பினர் பில்லி சன், பெரியசாமி,
மழலையர் பள்ளி ஆசிரியர்கள் இரா.ம. ஆதிலட்சுமி, கி. வணஜா
ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.



