
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் மாநில மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி கொண்டிருக்கிறார். நெகிரி மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்று மூன்று ஆண்டு காலத்தில் அவர் தன்னால் இயன்ற சேவைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் நோன்பு பெருநாளை கொண்டாடும் வசதி குறைந்த மக்களுக்கும் பலவகைகளில் உதவி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் துடிப்புமிக்க இளம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் இந்தியர்கள் மத்தியிலும் நன்மதிப்பு பெற்று வெற்றி நடை போடுகிறார்.

