
நாட்டின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் நடவடிக்கைக் குழு தலைவராக டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த நியமனம் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அந்தஸ்தில் இந்த நியமனம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இந்த பதவிக்கு நியமிக்கபட்டிருப்பதை அரசாங்கம் பெரிதும் வரவேற்றுள்ளது.
நோய்த்தொற்று தாக்கத்தினால் நாடு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் நாடு பொருளாதார மீட்சி திட்டத்திற்கு செல்லும் வகையில் பொருளாதார மீட்சி திட்டத்தின் நடவடிக்கைக்கு இவர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
