32.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

கிள்ளான் பள்ளத்தாக்கில் நாளை நீர் விநியோகம் சீரடைந்து விடும்

நீரில் துர்நாற்ற வாடை வீசியதைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டதால் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
தற்போது சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம் அடைந்து இருப்பதாக ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
மேலும் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் எலினா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று மாலை 6.00 மணி முதல் நீர் விநியோகம் கட்டங்க கட்டமாக தொடங்கியது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 94 லோரிகள் மூலம் நீர் விநியோகம் தொடர்கிறது.
நாளைக்கு நீர் விநியோகம் முற்றாக சீரடையும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles