
சிங்கப்பூர் நாட்டில் எம் ஆர் டி ரயிலின் முகக் கவசம் அணியாமல் சென்ற 39 வயது நபரை போலீசார் கைது செய்தனர் .
பாதுகாப்பு இடைவெளியை மீறியதால் இவர் கைது செய்யப்பட்டார்.
சக பயணி ஒருவர் இவருக்கு முக்கவசம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். நான் சமயப்பற்று மிக்கவன். எனது மாமா மற்றும் தாத்தா முக் கவசம் அணிந்து செல்வதைப் பார்க்கும்போது வெறுப்பாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
இவர் முகக்கவசம் அணியாமல் இருப்பது பற்றி ரயில் நிலைய ஊழியர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நிலையத்தை ரயில் வந்தடைந்தபோது அதிகாரிகள் அவரை கைது செய்தனர் என்று சிங்கப்பூர் தமிழ் முரசு செய்தி வெளியிட்டுள்ளது.
