
எனக்கு எதிராக அவதூறுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று டத்தோ மாலிக் கடுமையாக எச்சரித்துள்ளார். ஒருகோடி வெள்ளி மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டத்தோ நானல்ல. சில பொறுப்பற்ற நபர்கள் என் புகைப்படத்தை இணைத்து கைது செய்யப்பட்டு இருப்பதாக அவதூறுகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். கைதான அந்த டத்தோ நான் கிடையாது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
