
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமரிடம் மாமன்னர் தெரிவித்து விட்டதாக சட்டத்துறை அமைச்சர் வான் ஜூனைடி தெரிவித்துள்ளார். அடுத்தவர் சொல்வதைக் கேட்டு இவர் சொல்கிறார். இவர் இதை நேரடியாக கேட்கவில்லை. ஆகவே இவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் தெரிவித்தார். மாமன்னர் என்ன சொன்னார் என்பதை வான் ஜூனைடி நேரில் கேட்கவில்லை. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன்னதை கேட்டு இவர் இப்படி சொல்கிறார் என்று அவர் தெரிவித்தார்.
