
முஸ்லீம் அல்லாதோர் மதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை, பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்த மலேசிய குடும்பம்’ கொள்கைக்கு எதிராக அமைந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கடுமையாக சாடினார். மலேசியாவுக்கு இதுபோன்ற சட்டங்கள் தேவையில்லை. மாறாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்தக்கூடிய நல்லிணக்கச் சட்டமே தேவை என்று அவர் தெரிவித்தார்.
