
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு பைசர் தடுப்பூசி மிக விரைவில் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த கோவிட் தடுப்பூசி பணிக்குழு அனுமதி வழங்கி இருக்கிறது. இன்று தொடங்கி சரவாக்கில் இளையோர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அடுத்த கட்டமாக லாபுவான் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் இளைஞர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றார்.
