
வெளிநாடுகளில் பிறந்த தங்களது குழந்தைகளுக்கு மலேசிய தாய்மார்கள் குடியுரிமை பெற உரிமை உள்ளது என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டாவது பிரிவில் தந்தை என்ற சொல் அம்மாவையும் உள்ளடக்கியிருப்பதாக நீதிபதி அக்தார் தாஹிர் தெரிவித்தார். குடியுரிமை மீதான சில விதிகளில் பாகுபாடு அம்சங்கள் கொண்டிருப்பதால் தங்களுக்கு நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அரசு சார்பற்ற இயக்கமும் ஆறு தாய்மார்களும் தொடுத்த இந்த வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
