
நாட்டில் அமல்படுத்தப் பட்டிருக்கும் மக்கள் நடமாட்டம் உத்தரவு மே மாதம் 12-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், விருந்து நிகழ்ச்சிகள், ஒன்று கூடும் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை பொட்டலங்கள் மூலம் உணவு வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் நோய் தொற்றைத் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று அவர் சொன்னார்.
