
பத்துமலையின் ஒதுக்கப்பட்டப் பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சிலாங்கூர் அரசுக்கு அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது உண்மையில் 17 நிலங்களும் ஒதுக்கப்பட்டப் பகுதிக்கு வழங்கப்பட்டதில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் தேசிய நிலக் குறியீடு துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பில் மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமினுடின் ஷாரி விளக்கமளிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இங்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நிலங்களை ரத்துச் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று அவை கூறின.
