
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் பக்கத்தான் ஹரப்பானை சபா வாரிசான் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் சாடினார்.
பக்கத்ததான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முதுகில் குத்தியவர்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்வதா என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
பக்கத்ததான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்த்தவர்களுடன் இணைந்து பணியாற்ற பக்கத்தான் ஹரப்பான் முன்வந்திருப்பது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் சொன்னார்
