
கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரும் பக்கத்தான் ஹரப்பான கூட்டணி தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் அவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த டாக்டர் குண ராஜ் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து தமது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

அவரின் அலுவலக பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட டாக்டர் குணராஜ், அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இப்போது தயாராகுவோம் என்றார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையில் நாம் மகத்தான வெற்றி பெற கடுமையாக உழைப்போம்.
பொய் பித்தலாட்டத்தை முறியடித்து மக்கள் ஆதரவோடு நீதியை நிலைநாட்டுவோம். மேலும் டத்தோஸ்ரீ அன்வாரின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று டாக்டர் குணராஜ் கேட்டுக்கொண்டார்.
