
இங்குள்ள ஜொகூர் புக்கிட் கெமிலாங் சிவன் ஆலய வளாகத்தில் மண் சரிவு ஏற்பட்டு ஆலயத்தின் ஒரு பகுதி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாட்டார மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தொடர் மழையின் காரணமாக இந்த மண் சரிவு ஏற்பட்டதாக ஆலய தலைவர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனிடையே அந்த மண்சரிவு நிலமையை நேரில் சென்று கண்டு அறிந்து, ஒரு சிறிய தொகையை வழங்கியதோடு மாநிலத்தில் உள்ள மற்ற ஆலங்களும் பொது இயங்களும், இந்து அமைப்புகளும் இந்த ஆலயத்திற்கு உதவி கரம் நீட்ட வேண்டும் என ஜொகூர் மாநில ஜசெக தலைவர்களில் ஒருவரான சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்தார். ,ஜொகூர் மாநில முதல்வர் அஸ்னி முகமாட் தனது கட்டுபட்டில் இருக்கும் பேரிடர் நிவாரண நிதியில் இருத்து ஒரு சிறப்பு நிதியை அந்த ஆலத்தின் சீரமைப்புக்கு வழங்க வேண்டும் என சந்திர சேகரன் கேட்டுகொண்டார்.



