
மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்த ஒரு வழக்கில் 6 மில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கத்தைத் திருடியதாக போலீசுக்கு எந்த புகாரும் கிடைக்கவில்லை என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோ அப்துல் ஜாலில் ஹாசான் தெரிவித்தார். இப்பணத்தைத் திருடியதால் ஆணையத்தின் 3 மூத்த அதிகாரிகள் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தியை போலீஸ் கருத்தில் கொண்டது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை போலீசுக்கு இதுவரை எந்த போலீஸ் புகாரும் கிடைக்கவில்லை என்பதை தேசிய போலீஸ் படை உறுதிப்படுத்த விரும்புகிறது என்றார்.
