
நாட்டில் இப்போது கோவிட் நோய்த் தொற்றால் மரணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று ஒரேநாளில் 487 பேர் மரணம் அடைந்தனர். மேலும் இதுவரை கோவிட் நோய்த் தொற்றினால் நாட்டில் 24,565 பேர் பலியாகி இருப்பது பெரும் வேதனையும் அதிர்ச்சியும் தருவதாக மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் தெரிவித்தார். இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 7,910 மரணச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக குறிப்பிட்ட லிம் கிட் சியாங் இந்த செப்டம்பர் மாதம் ரத்தம் படிந்த மாதமாகக் இருப்பதாக சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
