
தடுப்புக் காவல் கைதி ஏ. கணபதி மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷா ஆலம் மரண விசாரணை நீதிமன்றத்தில் கணபதி மரணம் தொடர்பில் விசாரணை நடைபெறும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் அறிவித்துள்ளார். இரண்டு குற்றவியல் வழக்குகளுக்கு உதவும் வகையில் இவ்வாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கணபதி கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் செலாயாங் மருத்துவமனையில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
