
7 மாத கைக்குழந்தை மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 22 வயது பராமரிப்பாளர் பெண் ஒருவரை போலீஸார் கைது செய்திருப்பதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் தெரிவித்தார். புதன்கிழமை காலை தன் குழந்தையை பராமரிப்பாளரிடம் தந்தை விட்டுச் சென்றார். மாலையில் குழந்தையை எடுக்க வந்த போது அதன் தலையில் வீக்கம் காணப்பட்டது. குழந்தை தூக்க முயன்றபோது கீழே விழுந்ததால் தலையில் வீக்கம் ஏற்பட்டதாக பராமரிப்பாளர் பெண் கூறியிருக்கிறார். அழுது கொண்டிருந்தால் ஆத்திரமடைந்து அந்த பெண் பச்சிளம் குழந்தையை சித்திரவதை செய்தது இப்போது விசாரணையில் தெரிய வருவதால் அந்த குழந்தையை கொலை செய்ய முயன்றதாக அப்பெண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று அவர் தெரிவித்தார்.



