
பினாங்கு பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி பிறை தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பி40 மாணவர்களுக்கு சாம்சுங் மணிக் கணினிகளை வழங்கினார். இந்த மணி கணினிகள் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் கீழ் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 500 மணி கணினிகளில் ஒரு பகுதியாகும். இதற்காக .2 லட்சத்து 12 ஆயிரத்து ,500 வெள்ளி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது. இவை தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வாயிலாக வழங்கப்பட்டன. இதில் தொடக்கக்கட்டமாக பிறை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பி40 மாணவர்கள் 30 பேருக்கு இன்று மடிக்கணினிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



