
வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் போட்டி டும்படி கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை பேரா கெஅடிலான் தலைவர் பார்சா வாபா செல்வடோர் கேட்டுக் கொண்டார். பேராக் மாநிலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிட்டால் அது எங்களுக்கு உற்சாகமாக இருக்கும். அவர் எந்த இடத்தில் போட்டியிட்டாலும் மகத்தான வெற்றி பெறுவார். அந்த வகையில் அடுத்த பொதுத் தேர்தலில் அவர் பேரா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் பெரிதும் விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.



