
நெகிரி செம்பிலான் தம்பின் தாமான் இண்டாவில் ஒரு பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்பட்ட விவகாரம் தொடர்பில அந்தப் பகுதியைக் காலி செய்ய தயாராக இருப்பதாக ஸ்ரீ முருகன் ஆலய தலைவர் பார்த்திபன் தெரிவித்தார். அதே நேரத்தில், தற்போதைய கோவில் இடத்தை உடனடியாக அரசிதழில் இடம்பெற செய்யுமாறு நெகிரி செம்பிலான் மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டார். நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எஸ் வீரப்பன் மற்றும் ஜே அருள் குமார் ஆகியோருடன் ஒரு சந்திப்பை நடத்திய பிறகு, அந்த நிலத்தை காலி செய்ய முடிவு செய்யப்பட்டது என்று பார்த்திபன் தெரிவித்தார்.



