
வேலையிடங்களில் ஏற்பட்ட கோவிட் தொற்றால் இம்மாதம் 18ஆம் தேதி வரை 15,036 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1 கோடியே 10 லட்சம் வெள்ளி கோடி இழப்பீட்டுத் தொகையை சொக்சோ வழங்கியதாக மனித வளத் துணை அமைச்சர், டத்தோ அவாங் ஹஷிம் தெரிவித்தார். அத்தொகையில் 1 வெள்ளிக்கு மேல் 13,170 மலேசியத் தொழிலாளர்களுக்கு 10 லட்சம் வெள்ளி 1,866 அந்நியத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் கோவிட் தொற்றால் மரணமுற்ற 1,792 மலேசியத் தொழிலாளர்களுக்கு .35 லட்சம் வெள்ளி செலுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.



