
தமிழகம் முழுவதும் 3ஆம் கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



