
பேராக் தெலுக் இந்தானில் பல்வேறு இடங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஒரு பெண் உட்பட ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 25ஆம் தேதி முதல் சோதனையில் 37 வயது ஆடவரும் 28 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 50 வெள்ளி மதிப்புள்ள 4,189 கிராம் ஹீரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தெலுக் இந்தானில் மேலும் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 15 வயது முதல் 32 வயதுடைய ஜந்து இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவளிடமிருந்து ஷாபு மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் தெரிவித்தார்.
