
மலேசியா கிண்ண கால்பந்து போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜொகூர் ஜெடிதி குழு உட்பட 16 குழுக்கள் மலேசிய கிண்ணத்தை வெல்ல களமிறங்கியுள்ளன. சில தினங்களாக நான்கு பிரிவுகளில் நடைபெற்ற முதல் ஆட்டங்களை ரசிகர்கள் YouTube channel வழியாக பார்த்து மகிழ்ந்துள்ளனர். சுமார் 50 லட்சம் ரசிகர்கள் இந்த ஆட்டங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாக எப்ஏஎம் ஆட்சிக்குழு உறுப்பினர் கிரிஸ்டோபர் தெரிவித்தார். குறிப்பாக ஜொகூர் ஜெடிதி மற்றும் கிளாந்தான் இடையிலான ஆட்டத்தை 5 லட்சம் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து உள்ளனர் என்று அவர் சொன்னார்.
