
அம்னோ தலைமைச் செயலாளர், டத்தோ அகமட் மஸ்லானுக்குக் கொடுக்கப்பட்ட 20 லட்சம் வெள்ளி சவூதி அரேபிய நிதியமைச்சிடைமிருந்து பெற்றதாகும், மாறாக அது சட்டவிரோத நிதியல்ல என்று முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார். தமக்கு எதிராகச் சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டிலிருந்து அகமட் மஸ்லான் விடுதலையானார். இவ்வழக்கு தொடரப்பட்டால் குற்றஞ்சாட்டியத் தரப்பினர் வீழ்ந்து விடுவார்கள் என்பதையே காட்டுகிறது. கடந்த 14ஆவதுப் பொதுத்தேர்தலுக்கு முன்பு என்னிடமிருந்து பெற்ற நிதி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அகமட் மஸ்லான் இன்று விடுதலையானார். இதில் வெ.11 லட்சம் அபராதத் தொகைச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அகமட் மஸ்லானின் மீது வழக்குத் தொடர்வதில்லை என்று அரசு தரப்பு அறிவித்துள்ளது.



