
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் யூசோப் ராவுத்தருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுவது ஜோடிக்கப்பட்ட கற்பனை கதை என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இது முற்றிலும் பொய். 2018ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி மாலை 3 மணிக்கு அவர் என் வீட்டுக்கு வந்ததாக கூறியிருக்கிறார். அந்த தேதியில் நான் அவரை சந்திக்கவில்லை. மாலை 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை என் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன். யூசோப் ராவுத்தர் கூறுவது ஒரு வடிகட்டின பொய் என்பதோடு அதில் உண்மை இல்லை என்று பதில் மனு தாக்கலில் டத்தோஸ்ரீ அன்வர் இப்ரஹிம் குறிப்பிட்டுள்ளார்.
