
ஸ்ரீ பெர்டானாவிலுளப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை மேம்படுத்தச் செலவழிகப்பட்டத் தொகை வெ.3 கோடி அல்ல என்று பிரதமர் துறை அமைச்சர், டாக்டர் அப்துல் லத்திப் அகமட் தெரிவித்தார். இதற்கான உண்மையானச் செலவு வெ.3 கோடியே 85 லட்சமாகும். இந்த 22 ஆண்டு கால கட்டடத்திற்கு சீரமைப்புப் பணிகள் மிகவும் அவசியமானதாகக் கருதப்படுவதற்குக் காரணம் இதில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதே ஆகும். இதில் மின்சார வயரிங், கூரையில் கசிவுகளை மாற்றுவதும் அடங்கும் என்றார்.



