
கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இவ்வாண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதி வரரை 1 லட்சத்து 40 ஆயிரத்து 608 பேர் வேலை இழந்துள்ளனர். சொச்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள சிப் எனப்படும் தொழிலாளர் காப்புறுதி முறையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை பெறப்பட்டதாக மனிவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார். கோவிட்-19 பெருந்தொற்றினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதோடு அவர்கள் மீது பரிவும் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.



