
பேராக் மாநிலத்தில் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மரணம் அடைந்ததற்கு தடுப்பூசி காரணமல்ல என்று சுகாதார துணை அமைச்சர் டத்தோ டாக்டர் அஸ்மி கஸாலி தெரிவித்தார். பள்ளி மாணவி ஒருவருக்கு நீரழிவு நோய் ஏற்பட்டிருந்தது. மற்றொருவருக்கு இருதய பாதிப்பு இருந்தது. இந்த இரு மாணவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.



